Monday, June 29, 2020

•சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம் முடிவுற்றது!

•சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம் முடிவுற்றது! திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்தனர். இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்வதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை அகதிகள் முடித்துள்ளனர். கடந்த காலங்கள் போல் ஏமாற்றாமல் இம்முறை வாக்குறுதி அளித்தபடி அதிகாரிகள் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும். இச் சிறப்புமுகாம் இருக்கும்வரை கியூ பிராஞ் அதிகாரிகள் அகதிகளை பிடித்து அடைத்துக்கொண்டே இருப்பார்கள். எனவே இச் சிறப்புமுகாமை மூடுமாறு தமிழின உணர்வாளர்கள் இந்திய அரசிடம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். Image may contain: 2 people, people sitting

No comments:

Post a Comment