Monday, June 29, 2020

தந்தையர் தினத்தை முன்னிட்டு !

தந்தையர் தினத்தை முன்னிட்டு ! ஒரு மகன் தந்தையின் பாக்கட்டில் உரிமையுடன் பணம் எடுக்க முடியும். ஆனால் ஒரு தந்தையால் மகனின் பாக்கட்டில் அதேபோல் உரிமையுடன் பணம் எடுக்க முடியாது. கடவுள் எங்கே இருக்கிறார் என்று பத்து வயதில் நான் கேட்டபோது உடனே பருத்தித்துறை யுனைட்டட் புத்தகசாலைக்கு கூட்டிச் சென்று பெரியாரின் புத்கங்களை வாங்கித் தந்து படிக்க வைத்தவர். இன்று என்னிடம் விலை உயர்ந்த கைத் தொலைபேசி உண்டு. பல கமராக்கள் உண்டு. ஆனால் என்னுடன் சேர்ந்து நின்று படம் எடுக்க அப்பா உயிருடன் இல்லை. தந்தையர் உயிருடன் இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் அருமை உணரும்போது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை. தந்தையருக்குரிய சாபம் இது? குறிப்பு- கீழே உள்ள எனது தந்தையாரின் படத்தை தந்து உதவிய நண்பர் லக்ஸ்மன் திருநாவுக்கரசுக்கு நன்றிகள Image may contain: 1 person

No comments:

Post a Comment