Monday, June 29, 2020

•இந்திய அரசு ஈழத் தமிழருக்கு

•இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இனியும் நம்பலாமா? ஜ.பிசி வானொலிக்கு பேட்டியளித்த லண்டன் தமிழ்தேசியகூட்டமைப்பு முக்கியஸ்தர் போஸ் அவர்கள் தீர்வு பெறுவதற்கு இந்திய அரசைப் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார். கோரோனா பிரச்சனை முடிந்தபின் திங் ராங் போன்ற குழுவொன்றை அமைத்து அதன்மூலம் இந்திய அரசைப் பயன்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார். போஸ் அவர்களுக்கு லண்டனில் புறப்பட்டி ஏஜென்சி பிசினஸ் நன்கு நடக்கின்றது. அப்புறம் எதற்காக இப்படி ஒரு புது பிசினஸ் டீல் ஆரம்பிக்கின்றார் என்று தெரியவில்லை. கடந்தவருடம் இதே காலத்தில் இந்தியாவுடன் பேசி தீர்வுவொன்றைப் பெறப்போவதாக இவருடைய தலைவர் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார். சம்பந்தர் ஐயா இந்திய அரசைப் பயன்படுத்தி இதுவரை பெற்ற தீர்வு என்னவென்று தெரியவில்லை. இப்போது சம்பந்தர் ஐயா சரியாக பேச வில்லை என நினைத்து போஸ் ஆரம்பிக்கின்றாரா என்றும் தெரியவில்லை. போஸ் லண்டனில் இருக்கிறார். லண்டன் அரசில் லொபி செய்யாமல் எதற்காக டில்லி சென்று லொபி செய்ய போஸ் முனைகிறார் என்றும் புரியவில்லை. போஸ் ஏதோ இப்பதான் இந்தியாவை பயன்படுத்த முனைகின்றார் என்று இல்லை. இதுவரை தனியாக சென்று வந்தவர் இனி கும்பலாக குழுவாக செல்லப் போகிறாராம். அவ்வளவுதான். “நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களைப் பயன்படுத்திவிட்டது” என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா கூறினார். இதே வரிகளைத்தான் போஸ் அவர்களும் இன்னும் சில வருடங்கள் கழித்து கூறுவார். சிலவேளை அவருடைய பிசினஸ்சில் ஒரு 40 வீடுகள் அதிகரிக்கலாம். இத்தனை அழிவுக்கு பிறகும் இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று இனியும் நம்புவர்களை என்னவென்று அழைப்பது? Image may contain: 1 person

No comments:

Post a Comment