Monday, June 29, 2020

யோக்கியன் வாறார்.

•யோக்கியன் வாறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கோ! தன்னிடம் 20 கோடி ரூபா பணம் தரப்படவில்லை என சுமந்திரன் மறுத்திருக்கிறார். இவ்வாறு மறுப்பு தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கணக்கு கேட்டவுடன் கேட்டவரை மகிந்தவின் ஊடுருவல் என்று கூறுவது உரிய பதில் இல்லை. அதுமட்டுமல்ல சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அது வரவேற்கப்பட வேண்டியது. ஏனெனில் அப்பதான் அந்த பணம் எங்கே என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும். தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த பெண் கணக்கு கேட்பதாக கூறுகிறார். ஆனால் இதற்கு முன்னரே மாவை சேனாதிராசாவின் மகன் கணக்கு கேட்டிருக்கிறார். அதற்கும் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கணக்கு கேட்டிருக்கிறார். கட்சிக்குள் கணக்கு கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது சுமந்திரன் கூறுகிறார். ஆனால் கட்சிக்குள் கணக்கு கேட்டபோதெல்லாம் சுமந்திரன் கணக்கு காட்டவில்லையே. எல்லாவற்றையும்விட புலம்பெயர்ந்தோர் அனுப்பும் நிதியில் 15 வீதம் கமிஷன் சிறீதரன் பெறுகிறார். கேட்டால் அது கட்சிக்கு என்கிறார். இது பற்றி சுமந்திரன் வாய் திறப்பாரா? சுமந்திரன் யோக்கியன் என்றால் தேர்தலுக்கு வரும் நிதி எவ்வளவு, குறிப்பாக இந்திய தூதர் தரும் நிதி எத்தனை கோடி என்ற கணக்கை மக்கள் முன் கூறட்டும் பார்க்கலாம். Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing

No comments:

Post a Comment