Monday, June 29, 2020

•தூரம் அதிகம் இல்லை

•தூரம் அதிகம் இல்லை இதோ தெரியுது எதிரியின் எல்லை தமிழர் எல்லாம் எழுந்து நின்றால் இந்த எதிரிகளுக்கு இனி பதவி இல்லை சுமந்திரன் - சேர், இனி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது போல் இருக்கு. சுற்றிவர ஆர்மி பொலிஸ் எல்லாம் இருந்தும் கொஞ்சம்கூட பயமின்றி செருப்பு எறியிறாங்க. அடிக்க வராங்க. பயமாய் இருக்கு. ரணில் - என்ன சுமந்திரன்? வழக்கம்போல் ஒரு வருடத்தில் தீர்வு அல்லது தீபாவளிக்கு தீர்வு என்று சொல்ல வேண்டியதுதானே? சுமந்திரன் - சும்மா இருங்க சேர். உங்களுக்கு கள நிலைமை புரியவில்லை. முன்ன மாதிரி இப்ப தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. எல்லோரும் விபரமாயிட்டாங்க. பேஸ்புக்கில கிழி கிழியென்று கிழிக்கிறாங்கள். பத்து வோட்டு கிடைக்குமா என்றே தெரியவில்லை. ரணில் - என்னாலும் உதவ முடியாது. ஏனென்றால் என் நிலைமையும் மோசமாய் இருக்கு. சஜித் குறுப் கூட இருந்து குழி பறிக்கிறாங்கள். எனக்கே இந்தமுறை சீட் கிடைக்குமா தெரியவில்லை? சுமந்திரன் - ஆமா சேர். எனக்கும் என் கட்சிக்காரங்களும் குழி பறிக்கிறாங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ரணில் - நானே மகிந்தவின் காலில்தான் விழப்போறன். தேவையென்றால் நீரும் வாரும். சேர்ந்து போய் விழுவோம். இரண்டுபேரும் அவருக்கு நிறைய உதவி செய்திருக்கிறோம்தானே. எனவே அந்த நன்றிக்காக அவர் ஏதும் உதவுவார் என நம்பகிறேன். சுமந்திரன் - ஆமா சேர். நானும் வாறன். அவரை ஜ.நா வில் நான் காப்பாற்றியிருக்கிறேன். எனவே அதற்காக எனக்கு கட்டாயம் உதவுவார். Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing and suit

No comments:

Post a Comment