Monday, June 29, 2020

தியாகி சிவகுமாரனே!

தியாகி சிவகுமாரனே! மீண்டும் வந்து பிறந்துவிடாதே பிறந்தாலும் தமிழ் இனத்திற்காக போராடிவிடாதே ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் மாறும் காலம் நீ கொல்ல முயன்ற துரையப்பா நல்லவராம் அவரைக் கொன்றவர்கள்; வன்முறையாளர்களாம். துரையப்பாவை துரோகி என்று யார் உனக்கு சொல்லி தந்தார்களோ அவர்களே இப்ப கூறுகிறார்கள் துரையப்பாவை சுட்டது தவறாம். தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்று என்று நீ கோவப்பட்டாயோ அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்று கூறுபவரே இப்போது தமிழினத்தின் தலைவராக இருக்கிறார். யார் உனது போட்டோவைக் காட்டி தேர்தலில் வென்றார்களோ அவர்களே இப்போது கூறுகிறார்கள் தாங்கள் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லையாம். எனவே தயவு செய்து மீண்டும் பிறந்துவர எண்ணிவிடாதே! Image may contain: 1 person

No comments:

Post a Comment