Monday, June 29, 2020

•சுமந்திரன் சுத்துமாத்து!

•சுமந்திரன் சுத்துமாத்து! சுத்துமாத்து – 1 தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த கணக்கு பிரச்சனை எழுப்பப்படுகிறது என்று சுமந்திரன் கூறியுள்ளார். சுமந்திரன் கூறுவது பொய். ஏனெனில் இது நான்கு மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனிடமே கேட்கப்பட்டிருக்கிறது. சுத்துமாத்து – 2 கணக்கு கேட்பவர் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுகிறார். இது உரிய பதில் இல்லை. மேலும் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் இது பற்றி கேட்டிருக்கிறார். எனவே அவரையும் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறப் போகிறாரா? சுத்துமாத்து – 3 கட்சிக்குள் கேட்காமல் கட்சிக்கு வெளியே கணக்கு கேட்பது தவறு. இது கட்சியை உடைப்பதற்கான சதியாகவே கருதப்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார். இதுவும் பொய். ஏனெனில் நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்சிக்குள்தான் சுமந்திரனிடம் கேட்கப்பட்டது. அப்போது சுமந்திரன் உரிய பதில் அளிக்காததால்தான் இப்போது வெளியில் வந்து கேட்கின்றனர். சுத்துமாத்து – 4 தன்னிடம் பணம் எதுவும் தரப்படவில்லை என்று கூமந்திரன் கூறுகிறார். இதுவும் பொய். ஏனெனில் இந்த பிரச்சனை கட்சிக்குள் வந்தபோது சுமந்திரன் தானே அப் பணத்தை பெற்றதாகவும் அது மாகாணசபை தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். சுமந்திரன் மாறி மாறி பொய் கூறுகிறார். ஆனால் இனிவரும் நாட்களில் இன்னும் பல ஆதாரங்கள் வெளிவர இருக்கின்றன. குறிப்பு - இதுபற்றிய பத்திரிகை ஆதாரம் கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person

No comments:

Post a Comment