Monday, June 29, 2020

இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் வழக்கறிஞர்கள்.

இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இருவரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதுவும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். ஒருவர் மகிந்த அணியில் போட்டியிடும் செலஸ்ரின். மற்றவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சுமந்திரன். தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் 5வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதை அறித்து அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் செலஸ்ரின். இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் செலஸ்ரின் கூறியுள்ளார். ( அவர் பேசிய வீடியோ கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது) இப்போது எமது கேள்வி என்னவெனில் மகிந்த ராஜபக்சாவின் அணியில் உள்ள ஒருவரே ஈழ அகதிகளுக்கு குரல் கொடுக்க முடிகிறது என்றால் சுமந்திரனால் ஏன் கொடுக்க முடியாது? தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளாக தங்களை ஆதரிக்கும்படி கேட்கும் சுமந்திரன் ஈழ அகதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை அல்லவா? இலங்கையில் சிறையில் உள்ளவர்களின் பட்டியலை பிரதமர் மகிந்தவிடம் கையளித்தேன் என பெருமையாக கூறும் சுமந்திரன் அதேபோன்று இந்தியாவில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கும் பட்டியல் வழங்கி பெருமை கொள்ளலாமே? மக்களுக்கு குரல் கொடுப்பதற்கே எம்.பி பதவியே யொழிய சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறுவதற்கோ அல்லது சொகுசு பங்களா பெறுவதற்கோ அல்ல என்பதை யார் சுமந்திரனுக்கு கூறுவது? Image may contain: Stanislaus Celestine Image may contain: 1 person

No comments:

Post a Comment