Monday, June 29, 2020

•மணிவண்ணன் அவர்களை நினைவில் கொள்வோம்!

•மணிவண்ணன் அவர்களை நினைவில் கொள்வோம்! அவர் ஒரு சினிமா இயக்குனர் மட்டுமல்ல பிலபலமான நடிகரும்கூட அவர் விரும்பியிருந்தால் ஜெய் ஹிந் என்று படம் எடுத்திருக்கலாம். நாலு காசு சம்பாதித்திருக்கலாம். ஆனால் அவர் எந்த நெருக்கடிக்கும் அஞ்சாமல் ஈழத் தமிழர்களை ஆதரித்தார். புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதி நேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் இவர். அவரிடம் உதவி கேட்டுச் சென்ற எந்தவொரு ஈழத் தமிழனும் உதவி பெறாமல் திரும்பி வந்தில்லை. ஈழத் தமிழர்கள் ஒரு உண்மையான உணர்வாளனை இழந்து விட்டார்கள். இன்று அவரது 7வது நினைவு தினம். நன்றியுடன் நினைவு கூர்கிறோம Image may contain: one or more people and indoor

No comments:

Post a Comment