Monday, June 29, 2020

தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை

தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை தமிழ் இனவாதிகளாக சித்தரிக்கும் சாபக்கேடு தமிழ் தேசிய இனத்தில் மட்டுமே உண்டு. அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை நிறப் படுகொலை என கண்டிக்கும் தமிழ் கம்யுனிஸ்டுகள் முள்ளிவாய்க்காலில் தமிழர் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என கண்டிக்க மறுப்பது ஏன்? “தேசியம் ஒரு கற்பிதம்” என்று புத்தகம் எழுதியவரே கீழடி ஆய்வை சுமந்து தமிழ் தேசியம் பேசுகிறார். அது தெரியாமல் புலத்தில் இருக்கும் புரட்டுவாதிகள் தமிழ் தேசியம் பேசுவோரை தமிழ் இனவாதிகள் என்கின்றனர். லெனின் இப்போது தமிழனாக பிறந்து வந்தால் அவரையும் இனவாதி என கூற இவர்கள் தயங்கமாட்டார்கள். Image may contain: text that says "தனது தேசிய் இனத்திற்கு போராடாத எவரும்... போராடுலதாக சொல்வது ஏமாற்று வேலையே... -தோழர் லெனின்"

No comments:

Post a Comment