Monday, June 29, 2020

•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை!

•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை! தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் பொலிஸ் மேற்கொண்ட இரட்டைக் கொலை இந்தியாவையும் தாண்டி சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பு இனத்தவரின் கொலை எப்படி சர்வதேச கவனத்தை பெற்றதோ அதேபோன்று தமிழக பொலிசின் கொலையும் சர்வதேசத்தின் கவனம் பெற்று வருகிறது. கொல்லப்பட்ட தந்தையும் மகனும் மாரடைப்பு வந்து இறந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார். அதேவேளை இறந்த இருவருக்கும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்கிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது? சுகயீனம் காரணமாக இறந்தார்கள் என்ற காவல் கண்காணிப்பாளரின் கூற்றை தமிழக முதலமைச்சரே நம்பவில்லை அல்லது எற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். ஏனெனில் சுகயீனம் காரணமாக இறந்திருந்தால் எதற்காக தமிழக முதலமைச்சர் நிதி வழங்க முன் வர வேண்டும்? ஆனால் மக்கள் நிதி கேட்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கிறார்கள். எப்படி அமெரிக்காவில் பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் நீதி கேட்டார்களோ அதேபோன்று தமிழக மக்களும் பொலிஸ் கொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள். எப்படி அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு சர்வதேச மக்களின் ஆதரவு வழங்கப்பட்டதோ அதேபோன்று தமிழக மக்களின் போராட்டத்திற்கும் சர்வதேச மக்களின் ஆதரவு நிச்சயம் வழங்கப்பட வேண்டும். பொதுவாக “குற்றவாளிகள் தலைமறைவு. பொலிசார் வலைவீச்சு” என்றே செய்தி வருவது வழக்கம். இந்திய வரலாற்றில் முதன் முதலாக “பொலிசார் தலைமறைவு” என்ற செய்தி வந்துள்ளது. இதுதான் தமிழக மக்களின் போராட்ட சாதனை. இனி இது தொடரும். https://www.facebook.com/ProjectNightfall/videos/272402503853278/ Pause -2:53 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute 3,858,899 Views

No comments:

Post a Comment