Monday, June 29, 2020

ஓடாத மானும் போராடாத இனமும்

ஓடாத மானும் போராடாத இனமும் உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை! வெள்ளை இனத்தவரான கனடா பிரதமர் முழந்தாளிட்டு தனது ஆதரவை கறுப்பு இன மக்களுக்கு தெரிவித்துள்ளார். உலகளாவிய மக்களின் பாரிய போராட்டமே இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த போராட்டங்கள் ஒரு உண்மையை மீண்டும் ஒருமுறை ஈழத் தமிழருக்கு உணர்த்தியுள்ளது. அதாவது, இரந்து பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. எனவே தமிழ் மக்கள் விடுதலை பெறுவதற்கு, சம உரிமை பெறுவதற்கு, அமைதியான வாழ்வு வாழ்வதற்கு மூன்று வழிகள் உண்டு. அவையாவன, முதலாவது வழி - போராட்டம் இரண்டாவது வழி - போராட்டம் மூன்றாவது வழி - போராட்டம். போராட்டத்தை விட வேறு வழி எதுவும் இல்லை. இந்தியா பெற்று தரும், ஜநா பெற்று தரும் என்று கனவு காணாமல் போராடுவதே தமிழருக்கு இருக்கும் ஒரே வழி. குறிப்பு - போராட வேண்டும் என்பதை பொறுக்க முடியாமல் கோத்தாவின் விசுவாசிகள் “லண்டனில் இருந்து சொல்லிக்கொண்டிருக்காமல் உடனே ஓடிவந்து வந்து நாட்டில் இருந்து போராடுங்கள்” என்று இப்ப இதில் பின்னூட்டம் எழுதுவார்கள் பாருங்கள். Image may contain: 1 person, standing and shoes

No comments:

Post a Comment