Monday, June 29, 2020

உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதி இவற்றின் மறுவடிவம் சுமந்திரன்.

உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, நீதி இவற்றின் மறுவடிவம் சுமந்திரன். ஆம்ட. இது 100% உண்மை. எனவே முழுமையாக இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் யாருக்கு ? சுமந்திரன் ரணில் அரசுக்கு உண்மையாக இருந்தார். சுமந்திரன் ரணில் அரசுக்கு நேர்மையாக இருந்தார் சுமந்திரன் ரணில் அரசுக்கு வெளிப்படையாக இருந்தார் சுமந்திரன் ரணில் அரசுக்கு ஆபத்து வந்தபோது நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றார். இதுதானே உண்மை. இந்த உண்மையை சுமந்திரன் விசுவாசிகளே சொல்வதால் நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒன்று, இப்பெல்லாம் சுமந்திரனை அவரது ஆதரவாளர்களே கலாய்க்க ஆரம்பித்தவிட்டார்கள். நேற்று ஒரு பதிவில் ஒரு சுமந்திரன் விசுவாசி “பிரபாகரன் கனவை நனவாக்க சுமந்திரன் உழைக்கிறார்” என்று எழுதியுள்ளார். இப்படி இன்னும் நாலு பதிவுகள் வந்தால் அப்புறம் சுமந்திரனை கடவளாலும் காப்பாற்ற முடியாது. தோல்வி உறுதி. Image may contain: Kumaresan Asak, text

No comments:

Post a Comment