Monday, June 29, 2020

இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-

இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால் புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்! தேர்தல் காலங்களில் சம்பந்தர் ஜயாவும் சுமந்திரனும் வருவார்கள். ஆனால் மக்கள் போராடும்போது இவர்கள் வருவதில்லை. இப்போது மகிந்த ராஜபச்சாவிடம் இருந்து இரந்து உரிமை பெறுவோம் என கூற ஆரம்பித்துவிட்டார்கள். மகிந்த ராஜபக்சா முன் கை கட்டி குனிந்து நின்று இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடி பெறுவது. இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான மகிந்த ராஜபக்சா கும்பலை இனியும் நம்பி அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல். காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனை தேடிய தந்தை சின்னச்சாமி நல்லதம்பி மரணமடைந்துள்ளார். அவர் கடந்த 1200 நாட்களாக எழுந்து நின்று போராடியே மரணமடைந்துள்ளார். அவருடைய போராட்டம் தொடரும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். Image may contain: 4 people, text

No comments:

Post a Comment