Monday, June 29, 2020

யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்

யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் மண்ணை அள்ளி தூற்றி திட்டியபோது அப் பெண்ணை கஜேந்திரகுமார் பிரியாணி வாங்கிக் கொடுத்து அனுப்பிய பெண் என்றீர்கள். அதன்பின்பு ஒரு பெண் வவுனியாவில் செருப்பு காட்டிய போது அவரை கோத்தபாயாவின் ஆள் என்றீர்கள். இப்போது ஒரு பெண் 20 கோடி ரூபா எங்கே என்று கணக்கு கேட்டதும் அவரை கட்சியை உடைக்க மகிந்தாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்கிறீர்கள். ஏன்டா சொல்வதுதான் சொல்லுறியள் அவர் சீனாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்று சொல்லுங்களேன்டா. அது உங்களுக்கும் கொஞ்சம் கெத்தாக இருக்குமேடா. வாங்கப்போற ஜந்தோ பத்தோ வோட்:டுக்கு என்டா இப்படி கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்? இனியாவது சோத்தில கொஞ்சம் உப்பு போட்டுச் சாப்பிடுங்கடா. குறிப்பு - கணக்கு கேட்டவுடன் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரை மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுவது உரிய பதில் இல்லை. 20 கோடி ரூபா எங்கே? சுமந்திரன் உரிய பதில் கூறியேயாக வேண்டும். Image may contain: 1 person, text Image may contain: Athavan Ananth, standing and outdoor

No comments:

Post a Comment