Tuesday, March 19, 2013

மக்கள் போராட்டமாக மாறிவரும் மாணவர் போராட்டங்கள்.


• மக்கள் போராட்டமாக மாறிவரும் மாணவர் போராட்டங்கள்.

பாரதியார் பல்கலைக்கழக மாற்று திறனாளி மாணவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

மாணவர்களுக்கு மேலும் மேலும் உந்து சக்தியாக விளங்கும் அவர் உணர்வுகளை பாராட்டி வாழ்த்துகிறோம். மாணவர் போராட்டம் நியாயமானது என்பது மட்டுமல்ல அது மாபெரும் சக்தி கொண்டது என்பதை காட்டி வருகிறது.

மாணவர்களுக்கு ஆதரவாக புழல் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம். இது மாணவர் பின்னால் அனைத்து மக்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

எந்த மிரட்டலுக்கும் அடிபணியாது ஓங்கி ஒலிக்கட்டும் மாணவர் முழக்கங்கள்.

மேலும் மேலும் “தீ” யாக பரவட்டும் மாணவர் போராட்டங்கள். மாபெரும் மக்கள் சக்தி என்பதை ஆட்சியாளர்களுக்கு காட்டட்டும்.
1

4 comments:

  1. மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அரசு கைகட்டிகொண்டு வேடிக்கை பார்க்காது. அது தன்னால் முடிந்தளவு இறுதிவரை நசுக்கவே முனையும். நீங்கள் மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குங்கள். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.

    ReplyDelete
  3. மாற்று திறனாளி மாணவரின் உணர்வுகளை பாராட்டுவதோடு அவருக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  4. தமிழக மெங்கும் மாணவர்கள் போராடுகிறார்கள். தெலுங்குப் பெண் மாணவர் கூட போராடுகிறார். மாற்று திறனாளி மாணவரும் போராடுகிறார். மாணவர்களுக்கு ஆதரவாக சிறைவாசிகளும் போராடுகின்றனர். அனால் ஆட்சியாளர்கள் மனமிரங்கவில்லை. மாறாக நயவஞ்சகமாக அவர்கள் போராட்டத்தை நசுக்க முனைகின்றனர்.

    ReplyDelete