Tuesday, March 19, 2013

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்


• மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.
• அது போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.

ஒருபுறம் போலி அரசியல்வாதிகளால் மாணவர் போராட்டம் காட்டிக்கொடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் அரசு பொலிசாரை ஏவி அவர்களை நசுக்க முனைகிறது . “புலி என்று கூறி சிறையில் அடைப்போம”. “கல்லூரியை விட்டு நீக்குவோம்” என்றெல்லாம் அரசாலும் அதன் ஏவல் நாய்களான பொலிசாராலும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

எட்டு மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் இன்று தமிழகமெங்கும் தீயாக பரவியுள்ளது. அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். எனவே மக்களே மௌனமாக இருக்காதீர்கள். மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து மக்கள் போராட்டமாக மாற்றுங்கள்.

மத்திய அரசை மிரட்டி தமிழர் நலன் பேண வேண்டிய தி.மு.க சிறு கடைகாரர்களை மிரட்டி பந்த் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு மாநிலத்தில் டெசோ என்று நாடகம் காட்டுகிறது.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி ஆட்சியைப் பிடித்த அம்மையார் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூட விடாமல் பொலிசாரை ஏவி நசுக்கிறார்.

எனவே மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.
போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.

1 comment:

  1. மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.

    போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்

    ReplyDelete