Tuesday, March 19, 2013

தமிழக பொலிஸ் அராஜகம் ஒழிக


 தமிழக பொலிஸ் அராஜகம் ஒழிக.
• மாணவர் போராட்டம் மேலும் ஓங்குக.

அடித்து உதைத்து குண்டுக்கட்டாக தூக்கி வீசினாலும்
கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும்
இதற்கெல்லாம் பயப்படும் பொறுக்கி அரசியல்வாதி அல்ல - இவர்கள்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து பொங்கி எழும் மாணவ அலைகள்!

காந்தி தேசத்தில் காந்தீய வழியில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருப்பதைக் கூட தடுத்து பொலிஸ் அராஜகம் செய்கிறது. கல்லுரிகளுக்கு விடுமுறை விட்டு மாணவர் போராட்டத்தை நசுக்க முனைகிறது. அரசு தங்கள் கனவு பலிக்கவில்லை என்றவுடன் பொலிஸ் அராஜகத்தை கட்டவிழ்த்து மாணவர்களை மிரட்டுகின்றது. இந்த பொலிஸ் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

எட்டு மாணவர்களுடன் ஆரம்பித்த மாணவர் போராட்டம் இன்று ஆயிரக்கணக்கில் பரந்து விரிந்துள்ளது. கடந்த ஏழுநாட்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். அனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது.

இந்த போராட்டத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம். ஏனெனில் இது மாணவ சமுதாயத்திற்கு எமது நண்பன் யார்? எதிரி யார்? என்பதை மட்டுமல்ல எதிர்காலத்தில் எத்தகைய போராட்ட பாதையை தெரிவு செய்ய வேண்டும்? என்ற சிறந்த பாடத்தை அனுபவபூர்வமாக கற்றுக்கொடுக்கின்றது.

இந்த மாணவர் போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானது மட்டுமல்ல இனி உலகில் யாரும் அப்பாவி மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்க முடியாது என்ற பாடத்தையும் சேர்த்தே போதிக்கின்றது. மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும். திமிர் பிடித்த அரசுகளை தூக்கியெறிட்டும்.

3 comments:

  1. தமிழக பொலிஸ் அராஜகம் ஒழிக.
    மாணவர் போராட்டம் மேலும் ஓங்குக.

    ReplyDelete
  2. மாணவர் போராட்டம் மேலும் பரவட்டும். மக்கள் போராட்டமாக மாறட்டும். திமிர் பிடித்த அராஜக அரசுகளை தூக்கி எறியட்டும்.

    ReplyDelete
  3. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை அதுவும் நள்ளிரவில் கைது செய்து போராட்டத்தை நசுக்க முனையும் பொலிஸ் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ReplyDelete