Wednesday, July 24, 2013

1983ல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் அழகன் அவர்களை நினைவு கொள்வோம்.

1983ல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட
தோழர் அழகன் அவர்களை நினைவு கொள்வோம்.

அழகன் என்று அழைக்கப்பட்ட முருகேசு சந்திரகுமார் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவர். படிக்கும்போதே புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். புலிகள் இயக்கம் பிளவு பட்டு புதிய பாதை என்னும் அமைப்பாக இயங்கிய போது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். புதியபாதை அமைப்பும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி “தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை” என்னும் இயக்கத்தை ஆரம்பித்தவர். பேரவையின் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

பேரவை அமைப்பின் பணி காரணமாக இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார்.

தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை.

வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம்.

தோழர் அழகன் அவர்கள் நினைவாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment