Wednesday, July 24, 2013

இரண்டு பேய்களில் எது சிறந்தது?

இரண்டு பேய்களில் எது சிறந்தது?

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் உரையாடுபவர். எனவே இம்முறை உரையாடும்போது மாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராசாவா அல்லது விக்கினேஸ்வரனா சிறந்தது என வினாவினர். அதற்கு நான் இரண்டு பேய்களில் எது சிறந்தது என்றுகேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? பேய்களில் நல்ல பேய், கெட்ட பேய் என்று இருக்கா? பேய் என்றால் பேய்தானே என்றேன்.

மாகாணசபை தேர்தல் நடக்குமா என்று தெரியவில்லை. நீதிமன்றம் பேரால் தடையுத்தரவு வாங்க முயற்சி நடப்பதாக அரச மட்டங்களில் செய்தி கசிகிறது. அப்படி ஒருவேளை தேர்தல் நடந்தாலும் யார் முதலமைச்சர் என்பதை அந்த மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும்.

யாழ் மாகாண முதலமைச்சர் என்பது உயர் சைவ வேளார்கள்தான் வகிக்க வேண்டும் என்று ஏதும் சட்டம் இருக்கா? அல்லது ஏதும் கட்டாயமா? ஏன் ஒரு முஸ்லிம்க்கு வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அவர்களுக்கு இழைத்த பாவத்திற்கு ஒரு பிராயச்சித்தமாக இருக்கும் அல்லவா? அந்த மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை பிறக்கும் அல்லவா!இதனால் இன ஜக்கியம் எற்படுமல்லவா?

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் இருக்கிறார். எனவே வடக்கு முதலமைச்சராக இன்னொரு முஸ்லிம்மிற்கு வழங்க தேவையில்லை எனில் ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவருக்கு வழங்கப்படக்கூடாது? வாக்கு போடுவதற்கும். போராட்டத்தில் அடிபடவும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வேண்டும். ஆனால் முதலைமைச்சர் பதவிமட்டும் அவர்களுக்கு வழங்கக்கூடாது எனில் அது என்ன நியாயம்?

மாகாணசபைக்கு ஒரு மேசை, கதிரை வாங்கும் அதிகாரம் கூட இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கூறினார். அடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இருக்கும் ஒரு சில அதிகாரங்களையும் பறிப்பதற்கு மகிந்த கும்பல் துடிக்கிறது. இந் நிலையில் எதற்காக மாவையும் விக்கினேஸ்வரனும் போட்டீ போடுகிறார்கள்? என்னத்தை கிழிக்க போகிறார்கள்? இந்திய அரசை திருப்திப் படுத்த சொந்த மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment