Wednesday, July 24, 2013

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார்- சம்பந்தன் தெரிவிப்

• இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார்- சம்பந்தன் தெரிவிப்பு

காட்சி- மகிந்தவின் இரத்தம் தோய்ந்த கரங்களை சம்பந்தன் மகிழ்வுடன் பற்றிக் கொள்கிறார்.

நடிப்பு- கதாநாயகன் மற்றும் வில்லன் டபுள் வேடத்தில் மகிந்த ராஜபக்ச.

நகைச்சுவை- வழக்கம் போல் கோமாளி வேடத்தில் த.வி.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கலக்குகிறார். அடுத்த ஆஸ்கார் விருதிற்கு அனுப்பக்கூடிய சிறந்த நடிப்பு.

எழுத்து இயக்கம்- இந்திய காங்கிரஸ் அரசு

இது சண் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகம் அல்ல. அதையும் தாண்டிய இலங்கை தமிழர்களின் தீர்வு திட்ட நாடகம். பகுதி- 2

தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக வழக்கம்போல் இந்திய காங்கிரஸ் அரசு அரங்கேற்றும் தீர்வுத்திட்ட தொடர் நாடகம்.

யுத்தம் முடிந்து நாலு வருடமாகி விட்டது. இன்னமும் இலங்கை மற்றும் இந்திய சிறையில் உள்ளவர்கள் கூட விடுதலை செய்யப்படவில்லை. அது பற்றி சம்பந்தன் ஜயாவுக்கு எந்த கவலையும் இல்லை.

தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடினார்கள். சிலர் தீக்குளித்து உயிரைக்கூட துறந்தார்களே. அது பற்றியும் சம்பந்தன் ஜயா கவலைப்படப்போவதில்லை. ஏனெனில் இறந்தவர்களோ அல்லது சிறையில் இருப்பவர்களோ அவரது பிள்ளைகள் அல்லவே?

அவரது குடும்பம் இந்தியாவில் சொகுசாக இருக்கிறது. எனவே இந்திய விசுவாசியான அவர் இந்தியாவின் நாடகங்களுக்கு ஒத்துழைக்கிறார். தன்னை நம்பும் தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கிறார். வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment