Sunday, February 16, 2014

• ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுமாறு ராகுல் காந்தியிடம் திருமாவளவன் கோரிக்கை

• ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுமாறு ராகுல் காந்தியிடம் திருமாவளவன் கோரிக்கை

அன்று ராஜீவ் காந்தி தலையிட்டார். இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். பல கோடி ருபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இன்று ராகுல்காந்தியை தலையிடுமாறு கோரப்படுகிறது. ராகுல் காந்தி தலையிட்டால் இன்னும் எத்தனை தமிழர்கள் உயிர் பறிக்கப்படும்? இன்னும் எத்தனை தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள்? எத்தனை கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்படும்?

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல ஏற்கனவே அழிவுகளை சந்தித்து நொந்து போயிருக்கும் ஈழத் தமிழினம் தொடர்ந்தும் அழிவுகளை சந்திக்க வேண்டும் என்று திருமாவளன் ஏன் விரும்புகிறார்?

அன்று மூப்பனாரிடம் தேர்தல் கூட்டு என்ற பெயரில் பண பெட்டிகளை பெற்றுக் கொண்டு சொந்த சாதி மக்களையே கைவிட்டவர் திருமாவளவன். இன்று எத்தனை பெட்டி வாங்கி தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்?

தமிழீழம் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறியவர், யுத்த காலத்தில் புலித்தளபதிகள் பேச முயற்சி செய்த போது தொலை பேசியை அணைத்துவிட்டு பதுங்கியவர், இன்று எதற்காக ராகுல் காந்தியிம் கோரிக்கை வைக்கிறார்?

40 ஆயிரம் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டு அவர்கள் ரத்தம் காயுமுன்னரே கொழும்பு சென்று கொலைகார மகிந்தவின் கைளைக் குலுக்கியவர் இன்று எதற்காக கொலைகார ராகுல்காந்தியிம் கோரிக்கை வைக்கிறார்?

இலங்கையில் தமிழின அழிப்புக்கு சோனியா அரசு உதவியது யாவரும் அறிந்ததே. அப்படியிருக்க போர்க் குற்றவாளியான சோனியா குடும்பத்து ராகுல் காந்தியை தலையிடுமாறு கோருவதன் நோக்கம் என்ன?

திருமாவளவன் நோக்கம் ராகுல்காந்தி குடும்பம் தூய்மையானது என்று காட்டுவதா? அல்லது மீண்டும் ஈழத் தமிழினம் அழிய வேண்டும் என்ற விருப்பமா? எதுவாயினும் இனி ஈழத் தமிழர்கள் திருமாவளவன் போன்ற துரோகத் தலைமைகளை நம்பப் போவதில்லை.

No comments:

Post a Comment