Sunday, February 16, 2014

• சர்வதேச விசாரணை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- “டெசோ” வில் கலைஞர் தீர்மானம்

• சர்வதேச விசாரணை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- “டெசோ” வில் கலைஞர் தீர்மானம்

கலைஞர் அவர்களே!

உண்மையிலே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி தயவு செய்து டெசோ அமைப்பை கலைத்து விடுங்கள். இனியாவது எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் பிழைத்துக்கொள்கிறோம். உங்கள் நலன்களுக்காக எங்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்.

ஆட்சியில் இருக்கும் போது உண்ணாவிரத நாடகம் போட்டு 40 ஆயிரம் தமிழர்கள் அழிவதற்கு துணை செய்து விட்டு இப்போது போர்க்குற்றம் பற்றி விசாரிக்க இந்தியா முயல வேண்டும் என கோருவது யாரை ஏமாற்றுவதற்கு?

தனது பதவி நலனுக்காகவும் , தனது குடும்ப நலனுக்காகவும் கலைஞர் தமிழினத்திற்கு செய்த துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. மறக்க முடியாதவை. அதுவும் ஈழத் தமிழினத்திற்கு அவர் செய்த துரோகம் ஒருபோதும் வரலாற்றில் இருந்து மறையாது. காலம் உள்ளவரை தமிழர் நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும்.

அவருடைய குடும்பத்தில் பிரச்சனை வரும்பொதெல்லாம் அல்லது அவர் மகள் கனிமொழி ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மக்கள் கவனத்தை திருப்ப “டெசோ” நாடகம் போடும் அவரின் நரித் தனத்தை எவ்வாறு அழைப்பது?

தன்னுடைய ஆட்சியைக் காப்பதற்காக சிறப்பு முகாம்ளை உருவாக்கியவர். அதில் அப்பாவி அகதிகளை பிடித்து அடைத்தவர். அது மட்டுமல்ல விடுதலை கோரிய அகதிகளை பொலிஸ் தேவாரத்தை விட்டு அடித்து சித்திரவதை செய்தவர். இன்றும்கூட இந்த சிறப்பு முகாம்களை மூடுமாறு ஒரு அறிக்கைவிடக்கூட மனமில்லாதவர். இதை எப்படி எம்மால் மறக்க முடியும்?

ஒருவருடைய மரணம் அவரது எல்லா பாவங்களையும் மன்னிக்கும் என்பார்கள். ஆனால் அந்த மரணத்தால் கூட மன்னிக்கப்பட முடியாத நபர் ஒருவர் உள்ளார் என்றால் அவர் கலைஞர் கருணாநிதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment