Sunday, February 16, 2014

தமிழக மீனவர்களுக்காக பி.ஜே.பி சுஸ்மா சுவாராஜ் போராட்டம்

• தமிழக மீனவர்களுக்காக பி.ஜே.பி சுஸ்மா சுவாராஜ் போராட்டம்

• கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.

மக்களை கேணையர்களாக
மக்களை முட்டாள்களாக
மக்களை ஏமாளிகளாக
சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

தேர்தல் வருகிறது என்றதும் அவர்கள் தங்கள் சொந்த முகங்களை மறைத்து தங்களை மக்கள் காப்பாளர்களாக காட்ட முயல்கிறார்கள்.

எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசியல் தலைவர்களும் இப்படித்தான் என்றாலும்கூட
பிஜே.பி தலைவர் சுஸ்மா சுவராஜ் அவர்களின் தமிழக மீனவர்களுக்கான பாம்பன் போராட்டம்
மிக மோசமானது. அருவருப்பானது.

முள்ளிவாயக்காலில் பல்லாயிரம் தமிழ்மக்களைக் கொன்ற மகிந்தவின் இரத்த கரங்களை பற்றிக் குலுக்கியவர். அவர் கையால் பரிசு பெற்றவர். பாராளுமன்றத்தில் மகிந்தா இனப் படுகொலை செய்யவில்லை என்று வக்காலத்து வாங்கியவர். இப்போது எந்த முகத்தோடு தமிழக மீனவர்கள் முன் வந்து நிற்கிறார்?

மக்கள் மறதியுள்ளவர்கள்தான்.
மக்கள் தலைவர்களை நம்பி ஏமாறுபவர்கள்தான்.
ஆனால் அதற்காக பி.ஜே.பி தலைவர் சுஸ்மா சுவராஜ் அவர்களின் துரோகத்தை
மக்கள் மறந்து விடுவார்களோ என்றோ அல்லது
அவரது இந்த தமிழக மீனவர் மீதான போலி பாசத்தை நம்பிவிடுவார்களோ என்றோ
தப்பு கணக்குப் போட வேண்டாம்.

தேர்தலில் மக்கள் எல்லா கணக்கும் தீர்ப்பார்கள்.
இது உறுதி!

No comments:

Post a Comment