Sunday, February 16, 2014

நளினிக்கு பரோல் லீவு தருவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

• நளினிக்கு பரோல் லீவு தருவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

அன்று கலைஞர் ஆட்சியில் சிறை அதிகாரிகளின் அறிக்கையை வைத்து நளினிக்கு விடுதலை மறுக்கப்பட்டது.

இன்று ஜெயா அம்மையார் ஆட்சியில் சிறை அதிகாரியின் அறிக்கையை வைத்து பரோலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக 10 வருட சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள்சிறைவாசிகள் அரசின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் 23 வருடம் தண்டனை அனுபவித்த நளினிக்கு இதுவரை விடுதலை வழங்கப்படவில்லை.

ஆயுள் சிறைவாசிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 3 முறை பரோல் லீவு உண்டு. ஆனால் நளினிக்கு அந்த உரிமையைக்கூட வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது.

கலைஞர் கருணாநிதியும் ஜெயா அம்மையாரும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டு செயற்படுகின்றனர்.

• அகதிகள் லைசென்ஸ் பெறுவதற்குகூட கியு பிராஞ் பொலிஸ் தடுக்கிறது

ஆட்டோ ஓட்டிப் பிழைப்பதற்காக லைசென்ஸ் கூட பெற முடியாத நிலையில் தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் உள்ளனர். ஆனால் ஜெயா அம்மையாரோ இவ் அகதிகளுக்கு பிராஜா உரிமை வழங்குமாறு டில்லிக்கு கடிதம் போட்டுள்ளாராம்.

சிறப்புமுகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்யங்கள் என்று கேட்டால் பொறுங்கள் தமிழீழம் பெற்று தருவேன் என்கிறார் ஜெயா அம்மையார்.

மக்களே! தேர்தல் வருகிறது. உங்கள் கிழிந்த செருப்புகளை தயாராக வைத்திருங்கள்.

இனியாவது இந்த பொறுக்கி அரசியல்வாதிகளை நம்பாது தூக்கியெறியுங்கள்!

No comments:

Post a Comment