Saturday, May 30, 2015

• இதை என்னவென்று விளங்கிக்கொள்வது?

• இதை என்னவென்று விளங்கிக்கொள்வது?
அண்மையில் நடைபெற்ற “நாம்தமிழர்” மாநாட்டில் வழிகாட்டியாக சர்வாதிகாரி கிட்லர் படம் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மீது உலக யுத்தத்தை திணித்தவர் கிட்லர். பாசிசவாதியாக திகழ்ந்தவர் கிட்டலர்.
அவரை ஸ்டாலின் தலைமையில் இரண்டு கோடி மக்களை இழந்து தோற்கடித்தவர்கள் ரஸ்சிய மக்கள்.
இத்தகைய பாசிட் கிட்லரை வழிகாட்டியாக கொள்பவர்களை என்னவென்று அழைப்பது?
தமிழகத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கு வழிகாட்டியவர் தோழர் தமிழரசன். அவர் படம் வைக்கப்படாமையை என்னவென்று விளங்கிக்கொள்வது?
காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பிரபாகரன் படம் வைத்த “நாம் தமிழர்” கட்சியினருக்கு தோழர் தமிழரசன் படம் வைக்க முடியாமற் போனது ஏன்?
கடந்த வருடம் தோழர் தமிழரசன் தாயாரை மேடையில் ஏற்றி மதிப்பளித்த சீமான் அவர்களுக்கு இம்முறை மாநாட்டில் தமிழரசன் படத்தை வைக்க தோன்றாதது ஏன்?
தோழர் தமிழரசனை நிராகரித்துவிட்டு தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுக்க முடியுமா?
“நாம் தமிழர்” கட்சியினர் பதில் தருவார்களா?

No comments:

Post a Comment