Saturday, May 30, 2015

உணர்ச்சி பூர்வமாக அணுகுவதில் பயன் இல்லை. உணர்வு பூர்வமாக அணுகுவதே பயன் தரும்.

• உணர்ச்சி பூர்வமாக அணுகுவதில் பயன் இல்லை.
உணர்வு பூர்வமாக அணுகுவதே பயன் தரும்.
எமக்கு பணம் தேவையில்லை. தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். – வித்தியாவின் சகோதரி
வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- மகிளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார
வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - இலங்கை ஆசிரியர்கள் சங்கம்
வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமையான சம்பவம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் இன்னொரு வித்யாவை உருவாவதை எதிர்காலத்தில் தடுக்க முடியுமா?
இப் பிரச்சனை உணர்ச்சி பூர்வமாக அணுகுவது பயன் தருமா? மாறாக உணர்வுபூர்வமாக அணுகுவது பயன் தருமா?
இந்த கொடுமைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியது வரவேற்கப்பட வேண்டியதே. அதுவும் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.
ஜனாதிபதி மைத்திரி யாழ் வந்து வித்யா குடும்பத்தவர்களை சந்தித்து விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என கூறுமளவுக்கு மக்கள் போராட்டம் அமைந்துள்ளது.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரச அமைச்சர்கள் கூட வீதியல் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
இன்னனொரு வித்தியா தோன்றாமல் தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை ஏமாற்ற வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
ஒரு புறத்தில் ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தவர்கள் மறு புறத்தில் வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறும் முரணை பார்க்கிறோம்.
மீண்டும் ஒரு முறை மக்களின் போராட்டம் துரோக அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் மக்கள் போராட்டம் கற்று தந்த முக்கிய பாடம் என்னவெனில்
(1) மக்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராட தயங்கமாட்டார்கள்.
(2) போராட்டம் இன்றி மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது.
(3) சரியான தலைமை இல்லையேல் மக்கள் போராட்டம் துரோக தலைமைகளால் மழுங்கடிக்கப்படும்.

No comments:

Post a Comment