Saturday, May 30, 2015

• புறம்போக்கு என்கிற பொதுவுடமை

• புறம்போக்கு என்கிற பொதுவுடமை
சினிமா என்கிற பொழுதுபோக்கு சாதனம் இதுவரையில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கவே பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் மக்களை அறிவூட்டவும் அதனை பயன்படுத்த முடியும் என்பதை கொஞ்சம் நிரூபித்திருக்கிறது “புறம்போக்கு” என்கிற சினிமா.
மரண தண்டனைக்கு எதிராக மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்து வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் இப் படம் தன் நோக்கில் முழு வெற்றியை பெறாவிடினும் ஓரளவு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே.
சினிமா என்பது இன்று ஒரு பெரிய வியாபாரம். எனவே இப் படமும் தவிர்க முடியாமல் வியாபாரதிற்காக சில சமரசங்களை செய்துள்ளமை புரிந்து கொள்ள முடிகிறது.
கதாபாத்திரங்களுக்கு புரட்சிப் போராளிகளின் பெயரை சுட்டியிருப்பது மட்டுமல்ல படத்தில் மாக்சிய ஆசான்களின் மேற்கோள் வசனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வர்க்க முரண்பாடுகளை கையில் எடுக்காத எந்த தேசிய விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்ற வரிகள் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டிருக்கிறது.
புரட்சிகர பெயர்களை சுட்டுவதாலோ அல்லது மாக்சிய ஆசான்களின் மேற்கோள்களை உச்சரிப்பதாலோ ஒரு படம் புரட்சிகர சினிமாவாக அமைந்துவிட முடியாது. மாறாக இவை இல்லாமலேயே மக்களின் விடுதலையை பேசுகின்ற படங்கள் எடுக்க முடியும்.
மணி ரத்தினம் போல் ஆளும் வர்க்கத்திற்கு உதவும் படமாக இப்படம் எடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதுவும் புரட்சியை ஒருவகையில் கொச்சைப் படுத்தும் படம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
இனி வரும் காலங்களில் மக்களின் பிரச்சனைகளை பேசும் படங்கள் வருவதற்கு இப் படம் உதவும். அந்த வகையில் இதனை வரவேற்கலாம்.

No comments:

Post a Comment