Saturday, May 30, 2015

பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்

• பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்
நாம் தமிழர் மாநாட்டில் தோழர் தமிழரசன் படம் வைக்கப்ட்டுள்ளது. அதனை ஆதாரத்துடன் காட்டியுள்ளனர்.
எனவே அவர் படம் வைக்கப்படவில்லை என நான் எழுதியது தவறு. எனது தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.
தோழர் தமிழரசன் படம் மட்டுமல்ல புலவர் கலியபெருமாள் அவர்களின் படமும் வைத்து மதிப்பளித்துள்ளார்கள்.
இதற்காக “நாம் தமிழர்” கட்சியினரை பாராட்டுகிறேன். இதன் மூலம் இனிவரும் காலங்களில் அனைவரும் தவிர்க்க முடியாமல் தோழர் தமிழரசன் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையினை உருவாக்கியிருக்கின்றனர்.
கிட்லரின் படம் வைத்தமை வருத்தம் அளித்தாலும் அதனை எதிர் வரும் காலங்களில் தவிர்ப்பார்கள் என நம்புகிறேன்.
எனது தவறுக்கு மீண்டும் வருத்தம் தெரிவிப்பதுடன் தோழர் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் படம் வைத்து அவர்களை மதிப்பளித்தமைக்காக “நாம் தமிழர்” கட்சியினரை பாராட்டுகிறேன்.

No comments:

Post a Comment