Saturday, May 30, 2015

• “டெலோ” கம்பனும் வித்தியா கொலையும்

• “டெலோ” கம்பனும் வித்தியா கொலையும்
1984ம் ஆண்டளவில் “டெலோ” அமைப்பின் வடமராட்சி பிரிவு அரசியல் பொறுப்பாளராக கம்பன் என்ற போராளி இருந்தார். (தாஸ் பிரிவு)
அப்போது ஒருநாள் அவர் நெல்லியடி சுப்பையா கடைக்கு முன்னால் உள்ள லைற் போஸ்ற்றில் ஒரு தமிழ் இளைஞரைக் கட்டி வைத்திருந்தார்.
அவ் இளைஞர் ஒரு பெண்னை கற்பழித்துவிட்டார் என்றும் அதற்கு என்ன தண்டனை வழங்கலாம் என்றும் கூடிநின்று வேடிக்கை பார்த்த மக்களிடம் கம்பன் கேட்டார்.
உடனே மக்கள் அனைவரும் “சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று சத்தமாக கூறினார்கள்.
இந்த பதிலை எதிர்பார்த்த கம்பன் உடனே அந்த இளைஞரை சுட்டுக்கொல்ல முயன்றார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த நான் கம்பனிடம் “கற்பழிக்கப்பட்ட பெண் எங்கே? ஏன் நள்ளிரவில் அந்த பெண் இந்த இளைஞர் அறைக்கு சென்றார்?; இது எல்லாம் விசாரித்தே தண்டனை வழங்க வேண்டும்” என்றேன்.
எனது கூற்றில் இருந்த நியாயத்தை புரிந்த மக்கள் சிலர் எனது கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
தனது நோக்கம் நிறைவேறுவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என நினைத்த கம்பன் என் அருகில் வந்து தனது மடியில் இருந்த ரிவோல்வரைக் காட்டி “ விமர்சனத்திற்கு என்ன பதில் என்று தெரியும்தானே?” என்று மிரட்டினார்.
வேறு வழியின்றி நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். உடனே அந்த இளைஞன் கம்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
(இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய இரு கொசுறு விடயம் -முதலாவது இதே கம்பன் படிக்கும் காலத்தில் கீரிமலையில் குளிக்க வந்த பெண்களிடம் சேட்டை விட்டு தரும அடி வாங்கியவர். இரண்டாவது சுப்பையா கடை முதலாளி டெலொவுக்கு சாப்பாடு கொடுக்காமல் புலிகளுக்கு கோழிக்கறியும் சோறும் கொடுத்த காரணத்தால் அவரை பழி வாங்குவதற்றகாக அவரது கடைக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரையாவது சுட்டு தொங்கவிடுவார்கள் டெலோ அமைப்பினர்)
இன்றும்கூட இதே கம்பன் போன்று சிலர் வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோருகிறார்கள். ஆனால் இது எந்த பயனும் தரப்போவதில்லை என்று
நன்கு தெரிந்தும் மக்களை ஏமாற்ற இதுபோன்று நாடகமாடுகிறார்கள்.
மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. விழிப்புணர்வு பெற வேண்டும்.

No comments:

Post a Comment