Saturday, May 30, 2015

லண்டன் கரோ பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு !

• லண்டன் கரோ பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு !
நேற்றைய தினம் (21.05.15) லண்டன் கரோ பகுதியில் சீலன் அவர்களின் “வெல்வோம் அதற்காக” நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்டு செயற்படும் சீலன் அவர்கள் தனது “புளட்” இயக்க அனுபவங்களை இந் நூலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பலர் தமது அனுபவங்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் சீலன் அவர்களின் இந் நூல் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
கௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் நித்தியானந்தன், இளையதம்பி தயானந்தா, வேலு, சேனக்க ,சபேசன்,காமினி மற்றும் ஸ்ரான்லி ஆகியோர் உரையாற்றினார்கள்.
தமிழ், சிங்கள,முஸ்லிம் மூவின மக்களும் கலந்துகொண்டதுடன் நிகழ்வும் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்றது சிறப்பு அம்சமாகும்.
சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றது. அதில் அவர்கள் அர்வமுடன் கலந்து கொண்டார்கள். இதனை ஒழுங்கு செய்த அமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சீலன் அவர்களின் குடும்பத்தவர்கள் நிகழ்வில் பங்கு பற்றியதோடு அவரது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்கி வருவது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
சீலனின் பணிகளை பாராட்டுவதோடு அவருக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment