Saturday, May 30, 2015

நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்களே உண்மையான தேச பக்தர்கள்

நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர்.
அவர்களே உண்மையான தேச பக்தர்கள்
நக்சலைட்டுக்கள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுக்கள் பயங்கரவாதியோ அல்லது கிரிமினல்களோ அல்லர். ஒருவர் மாவோயிஸ்ட்டு என்பதற்காக கைது செய்வது தவறு என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் “நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர் , அவர்கள் தேச பக்தர்கள்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும் நக்சலைட்டு என்று கைது செய்வதும் அவர்களை பயங்கரவாதிகள் என சுட்டுக்கொல்வதும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சதீஸ்கரில் தமது நிலங்களை அந்நிய கம்பனிகளுக்கு விற்பதை எதிர்க்கும் ஆதிவாசிகளை நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி கொல்லப்படுகிறார்கள்.
பெண்கள் கூட மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
ஒருபுறம் நீதிமன்றம் நக்சலைட்டுகள் கிரிமினல்கள் அல்லர் என தீர்ப்பு வழங்கினாலும் மறுபுறம் பொலிசார் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி அப்பாவிகளை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில்கூட மதுரையில் ஆறு இளைஞர்கள் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஊழல் அரசியல்வாதியான ஜெயா அம்மையார் விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் மக்களுக்காக போராடும் புரட்சிவாதிகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்!
புரட்சிவாதிகளுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் இந்திய நியாயம்!

No comments:

Post a Comment