Thursday, September 29, 2022

•திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?

•திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா? திலீபன் பயங்கரவாதி என்றும் அதனால் அவரை நினைவுர்வதை தடை செய்ய வேண்டும் என சரத்வீரசேகர எம்.பி கோரியுள்ளார். திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இறந்தாலும் அவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என்பதால் அவரை நினைவுகூர அனுமதிக்கக்கூடாது என அவர் கூறுகின்றார். இலங்கையில் இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. இருந்தும் தடுக்கும்படி அவர் கோருகின்றார். சரி. பரவாயில்லை. ஆனால் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவும் பயங்கரவாதி என்றுதான் இலங்கை அரசு சுட்டுக் கொன்றது. ஆனால் ரோகன விஜேயவீராவுக்கு சிலை எழுப்பவும் வருடம்தோறும் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. திலீபனுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரும் சரத்வீரசேகர ரோகன விஜேயவீராவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோருவதில்லை. ஏனெனில் ரோகண விஜேயவீரா சிங்கள இனத்தை சேர்ந்தவர். திலீபன் தமிழ் இனத்தை சேர்ந்தவர். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது? இறந்தவர்களை நினைவுகூர்வதையும்கூட இனவாதக் கண்ணோட்டத்துடனேயே அணுகும் இவர்களிடமிருந்து இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது? இதனை சுட்டிக்காட்டி கண்டிக்க வக்கற்ற சிலர் திலீபனை கொலைகாரன் என்று எழுதி இலங்கை அரசுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.

No comments:

Post a Comment