Thursday, September 29, 2022

திலீபனை அவதார புருஷராக சித்தரித்து

திலீபனை அவதார புருஷராக சித்தரித்து காவடி தூக்கி வழிபடுதல் என்பது இன்னொரு திலீபன் உருவாவதை தடுத்துவிடும். திலீபன் கோரிய மக்கள புரட்சி வெடிக்கட்டும் என்பதையும் தடுத்து விடும். எனவே இப்போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இறந்தவர்களை நினைவு கூர்வது அழுது புரள்வதற்காக அல்ல. மீண்டும் எழுவதற்காக. திலீபன் நினைவு நாளில் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறுவது அகிம்சை வழியையும் இந்திய துரோகத்தையும் அம்பலப்படுத்திய திலீபனின் அரசியலை பேசக்கூடாது என்று அர்த்தமாகும். இது இந்திய தூதரின் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டதாகும்.

No comments:

Post a Comment