Tuesday, April 29, 2014

எழுவர் விடுதலை தாமதமா? அல்லது தடுக்கப்படுகிறதா?

எழுவர் விடுதலை
தாமதமா? அல்லது தடுக்கப்படுகிறதா?

எழுவர் விடுதலை மீண்டும் ஒரு முறை தடுக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை முறை தடுத்தாலும் அவர்கள் விடுதலை பெறுவது தவிர்க்க முடியாதது.

ஆம். தமிழ்மக்களின் போராட்டம் அவர்களை நிச்சயம் விடுதலை செய்யும்.

எழுவர் விடுதலையை கலைஞர் தடுத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஏன் ஜெயா பரோலில் விடுதலை செய்யலாம்தானே என இன்னும் சிலர் கேட்கின்றனர்.

ஆனால் இவர்களை எல்லோரும் இந்த விடுதலையை எதிர்ப்பவர்கள் சோனியாவின் மத்திய அரசே என்பதை மறந்துவிடுகின்றனர். அல்லது மறைத்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் ஒரு பகுதியே.
அதுவும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியே.
அதில் ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது
மிகப் பெரும் முட்டாள் தனமே.

• பேரறிவாளனை விசாரித்த அதிகாரியே அவர் ஒரு அப்பாவி என்று கூறிய பின்பும் அவரை விடுதலை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?

• ஏ.கே 47 வைத்திருந்த சஞ்சய் தத்திற்கு இதுரை 3 முறை பரோல் லீவு வழங்கிய மத்திய அரசு பற்றரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் லீவு வழங்க மறுப்பது ஏன்?

• பட்டப்பகலில் கூலிக்கு கொலை செய்த சங்கராச்சாரிக்கு ஒரு நீதி. பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி. இதுதான் இந்திய அரசின் நீதியா?

எழுவர் விடுதலையில் எற்படுத்தப்படும் தாமதம் தமிழ்நாடு விடுதலை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிறது.

No comments:

Post a Comment