Saturday, April 12, 2014

தோழர் மாறன் நினைவு நாள்.(11.04.1988)

• இன்று தோழர் மாறன் நினைவு நாள்.(11.04.1988)
• ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த தமிழக தமிழர்
• அவருக்கு ஈழத் தமிழர் சார்பாக வீர வணக்கங்கள்.

தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டவர். 1988ல் இடம்பெற்ற கொடைக்கானல் டி.வி டவர் வெடி குண்டு சம்பவத்தில் வீர மரணம் அடைந்தவர்.

அவருடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை.

1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இது அனைவரும் அறிந்ததே!

ஆனால் இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. அவ் வேளை இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் கருணாநிதி டி.வி பெட்டியை உடைத்து தமது எதிர்ப்பைக் காட்டினார்.

தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது ஈழத் தமிழர்களுக்கு தனது ஆதரவை எப்போதும் உறுதியாக காட்டி வந்திருக்கிறது. அது தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி 1986ல் மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தது. பின்னர் இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாக கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.

தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார்.

இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது வீர வணக்கத்தையும், அஞ்சலிகளையும் செலுத்துகிறோம்.

No comments:

Post a Comment