Monday, March 31, 2014

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.- வைகோ

• நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.- வைகோ

ஜ.நாவில் உள்ள தீர்மானம் குறித்தோ, அல்லது
இலங்கையில் தொடரும் அடக்கு முறைகள் குறித்தோ
தேர்தல் நேரத்தில் கூட மோடியை பேச வைக்க முடியாத வைகோ,
எந்த நம்பிக்கையில் மோடி பிரதமரானால் விடிவு கிடைக்கும் என்று கூறுகிறார்?

கடந்து 3 நாட்களாக 22 அகதிகள் சிறப்புமுகாமில் “வாழவிடு அல்லது சாகவிடு” என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விடிவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி அகதிகளுக்கு விடிவு கிடைக்குமா?

மோடி பிரதமரானால் சிறப்பு முகாம் மூடப்படுமா?
அதில் அடைத்துவைக்கப்ட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

• புரட்சிப் புயல் வைகோ அவர்களே!
உங்கள் பிரதமர் மோடி இதற்கு பதில் தருவாரா?
சிறப்புமுகாம் மூட பி.ஜே.பி சம்மதிக்குமா?
தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவிக்க தயாரா?
168Unlike ·  · Promote · 

No comments:

Post a Comment