Thursday, March 20, 2014

• மார்ச் -8 பெண்கள் தினத்தை முன்னிட்டு !

• மார்ச் -8 பெண்கள் தினத்தை முன்னிட்டு !

"பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது"- தோழர் லெனின்

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர்களில் ராஜினி யும் ஒருவர். இதனாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இந்திய ராணுவத்திற்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்து யாழ் பல்கலைக்கழகத்தை இயங்கவைத்த மருத்துவபீட பேராசிரியர்.

இவரை கோழைத் தனமாக சுட்டுக் கொன்றது மட்டுமல்ல இன்றும்கூட இவர் மது குடிக்கும் படத்தை பிரசுரித்து“ இவர் கொல்லப்பட்டதால் அங்கு நடந்து கொண்டிருந்த சமூக சீர்கேடு நிறுத்தப்பட்டது” என்று எழுதுகிறார்கள்.

பெண்கள் மது அருந்துவது சமூக சீர்கேடா?
மது அருந்துவதற்கு மரண தண்டனையா?

கீழ் வரும் இணைப்பில் அந்த கொடுமையான செய்தியைக் காணலாம்.

https://www.facebook.com/photo.php?fbid=451937804908094&set=a.173141539454390.27198.100002756352837&type=1&theater

• எந்தளவு ஆணாதிக்க திமிர் இது?
• எவ்வளவு கொடுமையான சமூகத்தில் வாழ்கிறோம்?
• எத்தனை நாளுக்கு இப்படி எழுத அனுமதிக்க போகிறோம்?

No comments:

Post a Comment