Monday, March 31, 2014

விடுதலை கோரி அப்பாவி அகதிகளின் 7வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

• விடுதலை கோரி அப்பாவி அகதிகளின் 7வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

இந்த அப்பாவி அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருப்பது மகிந்த ராஜபக்சவின் சிறையில் அல்ல.

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளே தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இலை வென்றால் ஈழம் மலரும் என்கிறார் ஜெயா அம்மையார்.

மோடி வென்றால் ஈழத் தமிழருக்கு விடிவு கிடைக்கும் என்கிறார் வைகோ.

ஜ.நா மூலம் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்துவேன் என்கிறார் கலைஞர்.

ஆனால் யாருமே தங்கள் மண்ணில் அடைத்து வைத்திருக்கும் இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கிறார்களே?

இந்த கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?

No comments:

Post a Comment