Monday, March 31, 2014

• பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள் பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

• பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள்
பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

அண்மையில் இரண்டு மாபெரும் கலைஞர்கள் மறைந்தார்கள்.
அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
அதுவும் தமிழர்களாகப் பிறந்தவர்கள்.
ஒருவர் பாலு மகேந்திரா.
இன்னொருவர் கே.எஸ் பாலச்சந்திரன்.

இருவரும் மாபெரும் கலைஞர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இருவர் மறைவும் கலைத் துறையில் மிகப் பெரும் இழப்பு.

ஆனால் பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள்
கே.எஸ. பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

கே.எஸ். பாலச்சந்திரன் என்ற கலைஞன்
தன் மனைவிக்கு துரோகம் செய்ததாக பெருமையுடன் கூறவில்லை.
அவரால் எந்த நடிகையும் தூக்கு போட்டு தற்கொலை செய்யவில்லை.
அவர் மறைந்தபோது மனைவி என்று இன்னொருவர் உரிமை கோரவில்லை.
அவர் உடலை பார்க்க அனுமதியுங்கள் என்று இன்னொரு மனைவி கெஞ்சவில்லை.
இருந்தும் அவர் ஏன் கௌரவிக்கப்படவில்லை?
அவருக்கு ஏன் அஞ்சலிகூட செலுத்தப்படவில்லை?

ஒருவேளை அவர் இறந்தவுடன்
தன்னுடன் சயிக்கிளில் வந்து குண்டெறிந்தவர் என்று
கூறுவதற்கு காசி ஆனந்தன் போல் நண்பன் ஒருவனை
அவர் கொண்டிருக்காததுதான் அவர் விட்ட தவறோ?
அதுதான் அவருக்கு அஞ்சலிகூட செலுத்தவில்லையோ?

இப்படிக்கு
கரவெட்டியில் பிறந்த ஒரு
அப்பாவி தமிழன்.
11Unlike ·  · Promote · 

No comments:

Post a Comment