Saturday, March 1, 2014

இளங்கோவன் தான் தீவிரவாதியாக மாறுவாராமே?

இளங்கோவன் தான் தீவிரவாதியாக மாறுவாராமே?

• மக்களே! பிய்ந்த செருப்பும,துடைப்பம் கட்டையும் ரெடியா?

பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கூடாது. அவர்களை தூக்கில் இட வேண்டும். இல்லையேல் தான் தீவிரவாதியாக மாறுவேன் என காங்கிரஸ் பிரமுகர் இளங்கோவன் மிரட்டியுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது. மீறி விடுதலை செய்தால் தான் தீக்குளிப்பேன் என காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல ராஜீவ்காந்தியுடன் சேர்த்து கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு என்ன நீதி எனவும் இதே காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் முதலில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தரட்டும். அதன் பின் தாராளமாக தீவிரவாதியாக மாறட்டும்.

(1)தானுவை கூட்ட திடலுக்கு அழைத்து சென்றது நளினியின் குற்றம் எனில் சிவராசனை விமான நிலையத்தில் இருந்து தனது காரில் அழைத்து சென்றது தலைவர் மூப்பனார் என்று கூறுகிறார்களே! அப்படியாயின் மூப்பனார் செய்தது குற்றம் இல்லையா?

(2) எதற்கு என்று தெரியாமலே பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை என்றால் தெரிந்துகொண்டே கூட்டத்தில் நிருபராக கலந்து கொள்ள அடையாள அட்டை கொடுத்த “இந்து” ஆசிரியர் ராம் க்கு என்ன தண்டனை? அவர் வழக்கில் குற்றவாளியாக கூட சேர்க்கப்படவில்லையே?

(3)புலிகள் வள்ளத்தில் வந்து இறங்குவதற்கு முழு உதவி புரிந்த வேதாரண்யம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் ஏன் விசாரிக்கப்படவில்லை? இவரைப் பற்றி கூறியதற்காகவே கோடியாக்கரை சண்முகம் காவலில் வைத்து கொல்லப்பட்டதாக கூறுகின்றரே. இது உண்மையா?

(4)மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் காங்கிரஸ் ஆட்சியில்தானே விடுதலை செய்யப்பட்டவர். அப்படியென்றால் ராஜீல் காந்தி கொலையில் ஆயுள்தண்டனை பெற்றவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? ராஜீவ்காந்தி மகாத்மா காந்தியைவிட உயர்;ந்தவரா? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று காங்கிரஸ்சார் தானே இவ்வளவு காலமும் கூறி வந்தார்கள்?

(5) உச்ச நீதிமன்றமே உயர்ந்தது. அதன் தீர்ப்புக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது என்று இதுவரை காலமும் கூறி வந்த காங்கிரஸ் இன்று அதே உச்சிமன்ற தீர்ப்பை எதிர்த்து விமர்சிக்கலாமா?

முப்பனார், ராஜேந்திரன், இந்து ராம் எல்லாம் பணக்காரர்கள். செல்வாக்கு மிக்கவர்கள். ஆனால் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்றோர் ஏழைகள். எந்த செல்வாக்கும் இல்லாதவர்கள். அதனால்தானே அவர்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டார்கள்?

இதையும் தாண்டி , மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்தும் உங்கள் அராஜகங்களை திணிக்க முயல்வீர்களாயின் இதுவரை உங்கள் உருவப் பொம்மைகளை கொளுத்திய மக்கள் நாளை உங்களையே கொளுத்த தயங்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment