Saturday, March 1, 2014

மீண்டும் ஆரம்பமாகும் மாணவர் போராட்டம்

மீண்டும் ஆரம்பமாகும் மாணவர் போராட்டம்

• பற்றி எரியும் காங்கிரஸ், பா.ஜ.க கொடிகள்

7 தமிழர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு எதிராக மீண்டும் மாணவர் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. மாணவர்கள் அக் கட்சிகளின் கொடிகளை எரித்து தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
மாணவர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி வரவேற்க வேண்டும்.

இன்று சென்னையில் ஆரம்பித்துள்ள மாணவர் போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.

சென்னையில் ஏற்பட்டுள்ள பொறி பெரும் காட்டு தீயாக தமிழகம் முழுக்க எரியட்டும்.

மக்களை ஒன்று திரட்ட வேண்டும். மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் போராட்டம் மூலமே 7பேரையும் விடுதலை செய்ய முடியும்.

• தீ பரவட்டும்! எரியட்டும் காங்கிரஸ் பா.ஜ.க கொடிகள்!

No comments:

Post a Comment