Thursday, March 20, 2014

• மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாய் சிறையில் அடைப்பு! • அண்ணன் எங்கே என்று கேட்ட தங்கை முகாமில் அடைப்பு!

• மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாய் சிறையில் அடைப்பு!

• அண்ணன் எங்கே என்று கேட்ட தங்கை முகாமில் அடைப்பு!

• இது தான் ஜனாதிபதியின் “மகிந்த சிந்தனையா”?

• இது தான் மகிந்தா அமுல் படுத்தும் “வடக்கின் வசந்தமா”?

• தொடரும் இந்த அடக்குமுறைக்கு முடிவே இல்லையா?

முதலில் அஞ்சலி செலுத்தியதாக பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் அடைத்தார்கள்.

பின்பு பெண்களுக்காக நியாயம் கேட்ட மருத்துவரை மெண்டல் என்று சிறையில் அடைத்தார்கள்.

தற்போது தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாயையும் சகோதரியையும் சிறையில் அடைக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவே யுத்தம் செய்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார். ஆனால் யுத்தம் முடிந்த பின்பும் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தனது மகனை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு தாய்க்கு உரிமை இல்லையா?

தனது அண்ணன் எங்கே என்று கேட்பதற்கு ஒரு சிறுமிக்கு உரிமை இல்லையா?

ஆனந்தி தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மகாணசபை உறுப்பினர். அவர் தனது கணவன் எங்கே என்று கேட்டதற்கு அவரை நன்னடத்தை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயா மிரட்டுகிறார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி மக்களின் கதி என்ன? இது தான் மகிந்த சிந்தனையா? இதுதான் மகிந்தவின் வடக்கின் வசந்தமா?

• அடக்குமுறை மூலம் சர்வாதிகார ஆட்சி செய்யும் அரசுக்கு எதிராக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

• அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது இந்தியாவோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உரிமை பெற்று தரப்போவதில்லை. அவை பெற்று தரும் என நம்புவது முட்டாள் தனமாகும்.

• எனவே தமிழ் மக்கள் தமக்கான உரிமையை தாம் போராடியே பெற வேண்டும்.

No comments:

Post a Comment