Monday, March 31, 2014

• இந்திய ராணுவ போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படும்- ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு

• இந்திய ராணுவ போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படும்- ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு

• ஜ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா வெளிநடப்பு - செய்தி

அமெரிக்கா கொண்டு வந்த ஜ.நா தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய அரசு கூறிவந்தது. அதனால் இந்திய ராணுவத்தின் போர்க் குற்றங்களும் விசாரிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச மிரட்டினார். உடனே இந்திய அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது.

தன்மீது தவறு இல்லை எனில் இந்திய அரசு ஏன் இலங்கை அரசின் மிரட்டலுக்கு அஞ்சவேண்டும்? இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இறுதிவரை கூறிவிட்டு திடீரென்று ஏன் வாக்களிக்காமல் வெளியேறியது?

1987களில் இந்தியராணுவம் புரிந்த போர்க்குற்றம் மட்டுமல்ல முள்ளிவாயக்கால் அழிவிற்கும் இந்தியா துணை போய் உள்ளது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது அல்லவா!

தமிழ்மக்களை மீண்டும் ஒரு முறை இந்திய அரசு ஏமாற்றியுள்ளது. இனியும் இந்திய அரசு தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் என நம்பவேண்டுமா?

மதவாதத்தை காங்கிரஸ் எதிர்த்தால் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என கலைஞர் இன்று கூறியுள்ளார்.
தமிழினத்திற்கு காங்கரஸ் அரசு துரோகம் செய்வது குறித்து கலைஞருக்கு எந்த வருத்தமும் அளிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டியது காங்கிரஸ் மட்டுமல்ல அதற்கு துணை போகும் கலைஞரின் தி.மு.கவும்தான்.

No comments:

Post a Comment