Thursday, March 20, 2014

• அமெரிக்காவை நம்பலாமா?

• அமெரிக்காவை நம்பலாமா?

இந்திய அரசை மீறி அமெரிக்க அரசு
இலங்கை தமிழர்களுக்கு உதவுமா?

இலங்கை தமிழர்களின் சிறிய சந்தைக்காக 
இந்திய பெரும் சந்தையை அமெரிக்கா இழக்குமா?

அன்று இந்திய அரசை நம்பச் சொன்னவர்கள்
இன்று அமெரிக்க அரசை நம்பச் சொல்கிறார்கள்.

புலிகளை பயங்கரவாத இயக்கம் என தடை செய்த அமெரிக்கா
புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி செய்த அமெரிக்கா
இன்று தமிழ் மக்களுக்கு உதவும் என்று எப்படி நம்புவது?

போஸ்னியாவில் நடந்தது இனப் படுகொலை என்ற அமெரிக்கா
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறது.
இறந்த தமிழர்கள் வெள்ளையர் அல்ல என்பதாலா?

தெற்கு சூடான் ஜ தனிநாடாக பிரித்த அமெரிக்கா
இலங்கையில் தனிநாடு பிரிய மறுக்கின்றது.
ஈழத்தில் எண்ணெய்வளம் இல்லை என்பதாலா?

அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது இந்திய அரசோ
எமக்கு ஒருபோதும் விடுதலை பெற்று தரப்போவதில்லை.
இந்த உண்மையை அனைவரும் உணரும்வரை
எமக்கு விடிவு வரப்போவதில்லை!

No comments:

Post a Comment