Saturday, March 1, 2014

உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு என்பது 7 பேரின் விடுதலையை தாமதப்படுத்தலாம். ஆனால் அவர்களின் விடுதலையை இனி ஒருபோதும் தடுக்க முடியாது

 உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு என்பது 7 பேரின் விடுதலையை தாமதப்படுத்தலாம்.
ஆனால் அவர்களின் விடுதலையை இனி ஒருபோதும் தடுக்க முடியாது.

• கடந்த மாதம் நளினியை பரோல் லீவில் விடுவதற்கு மறுத்த ஜெயா அம்மையார் இப்போது 7 பேரையும் விடுதலை செய்துள்ளார்.

• தான் ஆட்சியில் இருந்தபோது நளினியை விடுதலை செய்ய மறுத்த கலைஞர் இன்று அவர்களை விடுவித்தால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார்.

• மீனவர் கொலை செய்யப்படுவது தொடர்பாக ஜெயா அம்மையார் இதுவரை அனுப்பிய எந்த கடிதத்திற்கும் பதில் தராத மத்திய அரசு தற்போது ஜெயா அம்மையார் அனுப்பிய கடிதம் கிடைக்கு முன்னரே பதில் தாக்கல் செய்கிறது.

• தமிழக மீனவர் கொலைக்கு இதுவரை வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு வாய் திறந்து கண்டனம் தெரிவிக்கிறார்.

• ஒரு முன்னாள் பிரதமர் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்று ராகுல்காந்தி கவலைப்படுகிறார். ஆனால் 50ஆயிரம் ஈழத்தமிழர்களின் கொலைக்கு என்ன நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறுவாரா?

• 7 பேரையும் வரலாறு விடுதலை செய்கிறது. இந்த நீதியை மக்களே வழங்குகிறார்கள். மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று யாரும் இல்லை.

No comments:

Post a Comment