Sunday, September 28, 2014

தொடரும் ஏமாற்று அரசியல்!

தொடரும் ஏமாற்று அரசியல்!
செய்தி- ஜ.நா வில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன உணர்வுள்ள தமிழர்கள் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும்- கலைஞர் கருணாநிதி.
கலைஞர் அவர்களே!
நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ராஜபக்சவை
உங்கள் மகள் கனிமொழி சந்திக்க வைத்தீர்கள்.
உங்கள் கட்சி எம்.பி பாலு பரிசில்கள் பெற்றார்.
இந்தியாவுக்கு மகிந்த வந்தபோது நீங்கள்
கறுப்பு கொடி காட்டவில்லை- மாறாக உங்கள்
காங்கிரஸ் அரசு செங்கம்பள வரவேற்பு கொடுத்தது.
நீங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது
ஜ.நா வில் மகிந்த உரையாற்ற கூடாது என்றால்
அதை கேட்க ஜ.நா காரன் என்ன இளிச்சவாயனா?
இதை எல்லாம் மறக்கவும்
நடந்ததை நடந்ததாகவும்
நடப்பவை நல்லவையாகவும் நினைக்க
நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால்
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
(1) நீங்கள் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடும்படி குரல் கொடுங்கள்.
(2) அடைத்துவைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வலியுறுத்துங்கள்.
(3) அகதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழி செய்யுங்கள்.
(4) அகதிகளுக்கு கியூ பிராஞ் பொலிஸ் செய்யும் தொல்லைகளை நிறுத்துங்கள்
(5) அகதிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வழி செய்யுங்கள்.
(6) ஈழ அகதிகள் தீபெத் அகதிகள் போல் நடத்த குரல் கொடுங்கள்
மேலே கேட்டுக்கொண்டவை யாவும் உங்களால் செய்யக்கூடியவையே.
இவற்றை முதலில் செய்ய நீங்கள் தயாரா? அல்லது
தொடர்ந்தும் ஏமாற்று அரசியல் செய்யப் போகிறீர்களா?

No comments:

Post a Comment