Sunday, September 28, 2014

நம்பிக்கையளிக்கும் பேரணி

நம்பிக்கையளிக்கும் பேரணி
வெற்றி பெற வாழ்த்துகள்!
செப்-24- ஈழத் தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள் செல்லும் பேரணி.
வழக்கமான பேரணிகளை விட இந்த பேரணி வித்தியாசமானது.
தி.மு.க மற்றும் அதிமுக போன்றவை இதுவரை முன்வைக்க மறுத்த
“சிறப்பு முகாம்களை இழுத்து மூடு” என்னும் கோரிக்கையை இப் பேரணி எழுப்புகிறது.
இந்த தமிழ்தேசிய எழுச்சியானது விரைவில் ஆயுதப் போராட்டமாக மாறும்.
ஈழ மற்றும் தமிழக மக்கள் இணைந்த போராட்டமாக நிச்சயம் வடிவம் பெறும்.
தமிழக மக்கள் ஏழுச்சி பெறுவார்கள் என்பதற்காக
இந்திய அரசு இதுவரை ஈழப்போராட்டத்தை நசுக்கியது.
ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கினாலும்
தமிழக மக்கள் எழுச்சி பெறுவார்கள் என்பதை இந்த பேரணி எடுத்து காட்டுகிறது.
இந்த பேரணியால் இலங்கை அரசு நடுக்கம் கொள்ளாவிடினும்
இந்திய அரசு நிச்சயம் அச்சம் கொள்ளும் என்பது உறுதி.
“உங்கள் அருகில் 7 கோடி தமிழர் நாம் இருக்கிறோம். எமது தலைவர்கள் உங்களை கைவிட்டாலும் நாம் கைவிடமாட்டோம்” என காட்டும் வகையில் தமிழக தமிழர்கள் பேரணி செல்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை தரும் தமிழக மக்களின் பேரணி வெற்றி பெற வாழ்த்தகள்.

No comments:

Post a Comment