Sunday, June 30, 2013

13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்

“13வது திருத்த சட்டமும் சமகால நிலையும்” என்னும் தலைப்பில் இன்று (29.06.13) நடந்த கலந்துரையாடலில் காதர் அவர்கள் உரையாற்றினார்.

காதர் அவர்கள் நீண்டகால அரசியல் வரலாறு உடையவர். பல்வேறு அமைப்புகளில் பங்குபற்றி செயலாற்றியவர். அண்மையில் நடந்த டில்லி மாநாட்டிலும் பங்கு பற்றி 13வது திருத்த சட்டம் பற்றி உரையாற்றியவர். இவர் எழுதிய சுயநிர்ணய உரிமை குறித்த நூலை முன்னர் ஈரோஸ் இயக்கம் பிரசுரம் செய்திருந்தது. பின்பு லண்டனில் இவருடைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றி உரையாற்றியிருந்தார்.

தற்போது இந்த 13வது திருத்த சட்டம் தொடர்பாக தமிழ் சக்திகள் அனைவரும் ஓர் அமைப்பாக இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டும் என்கிறார். போர்க்குற்றம் தொடர்பாக ஜ.நா மன்றத்தில் போராடுவது போல் இந்த 13வது சட்டத்திற்காகவும் இன்னொரு அமைப்பாக போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மலையகத்தை பிறப்பிடமாகக்கொண்ட காதர் அவர்கள் மலையக மக்கள் முன்னனியில் நீண்டகாலம் செயற்பட்டவர். அந்த மலையக மக்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது பற்றியோ அல்லது ஆகக்குறைந்தது இந்த 13வது திருத்தம் மூலமாக மலையக மக்களுக்கு என்ன நன்மை என்பது குறித்தோ அல்லது முஸ்லிம் மக்கள் சார்பாகவோ எதுவும் பேசாதது ஆச்சரியமாக இருந்தது.

நீண்டகால இடதுசாரிப் பாரம்பரியம் கொண்டவன் என தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் காதர் அவர்கள் மக்கள் சார்ந்து தனது கருத்துகளை தெரிவிக்காதது மட்டுமல்ல அந்த மக்களின் எதிரியான இந்திய அரசிடமே மக்களுக்கு எவ்வித பயனுமற்ற 13வது திருத்த சட்டத்திற்காக கையேந்த வேண்டும் எனக் கோருவது மகா வெட்க கேடானது.

No comments:

Post a Comment