Sunday, June 30, 2013

• டாக்டர் சிவசங்கர் விடுதலை

• டாக்டர் சிவசங்கர் விடுதலை

இலங்கை ராணுவத்தால் சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நியாயம் கேட்க சென்ற டாக்டர் சிவசங்கர் அவர்கள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அநுராதபுர சுகாரதார பிரிவில் கடமையாற்றி வந்த அவரை “மெண்டல்” என முத்திரை குத்தி சிறையில் அடைத்தது காவல்துறை. பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் சிவசங்கரும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் ஒரே காலத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒருமித்து ஜக்கியமாக போராடியதால் அரசு வேறுவழியின்றி பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது. இன்று டாக்டர் சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

அரசுக்கு எதிராக குரல் கொடுப்போரை கைது செய்து சிறையில் அடைத்து மிரட்ட முனைகின்றனர். ஆனால் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழுவர் என்ற வரலாற்று உண்மையை காண அவர்கள் மறுக்கின்றனர். இந்த அடக்கு முறை அரசும் மக்களால் நிச்சயம் தூக்கியெறியப்படும்.

No comments:

Post a Comment